ஏற்காட்டில் நாளை 43வது கோடை விழா!-வீடியோ

  • 6 years ago
சேலம் ஏற்காட்டில் 43வது கோடைவிழா, மலர்கண்காட்சி நாளை தொடங்குகிறது. இதற்கான பணிகளில் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடைவிழா நடப்பது வழக்கம். அதன்படி, 43-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை முதல் 5 நாட்கள் நடைபெறுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோடை விழாவை தொடங்கி வைக்கிறார். இதில் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.

Recommended