நாடி, நரம்புகளில் ஊறிப்போன கொலைவெறி... தஷ்வந்தின் அச்சுறுத்தும் வாக்குமூலம்!- வீடியோ

  • 7 years ago
சிறுமி ஹாசினி, தாய் மட்டுமல்ல தந்தையையும் கொல்ல திட்டமிட்டிருந்தாராம் தஷ்வந்த். குதிரை பந்தயம், ஜாலி வாழ்க்கை என்று இருந்தவரிடம் வேலைக்கு போ என்று பெற்றோர் சொன்னதே இதற்குக் காரணமாம். போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்களைச் சொல்லியுள்ளார் தஷ்வந்த். 22 வயது இளைஞர் தஷ்வந்த் காவல்துறையிடம் சிக்கவில்லை என்றால் இன்னும் எத்தனை கொலை செய்திருப்பார் என்பதை நேற்று ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் நடந்த சம்பவம் காட்டியது. நீதிபதி முன்பு ஆஜர்படுத்திவிட்டு, தஷ்வந்தை போலீசார் வெளியே அழைத்துவந்தனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த தஷ்வந்த்தின் உறவினர் ஒருவர் தஷ்வந்த்தின் கன்னத்தில் பளாரென அறைந்தார்.

தஷ்வந்தின் கண்ணில் வெளிப்பட்ட கோபம், வன்மமத்தைக்கண்ட காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் சில நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தஷ்வந்தின் முகம் முழுக்க கோபம் கொப்பளித்தது. இதுமட்டுமில்லை, காவல்துறையிடம் தஷ்வந்த் அளித்த வாக்குமூலத்தில் இன்னும் சிலரை கொலை செய்ய கட்டம் கட்டியிருந்ததாகவும் அதற்குள் காவல்துறையிடம் சிக்கிவிட்டதாக கூறியுள்ளார். யார் அவர்கள்? ஏன் தஷ்வந்த் அவர்களை கொலை செய்யவேண்டும்?

தஷ்வந்தின் முதல் டார்கெட் அவரது தந்தை சேகர் முதல் நபர் என்கிறது காவல்துறை. மெக்கானிக்கல் எஞ்சினீரிங் முடித்துவிட்டு, வேலைக்குப்போ என்று பெற்றோர் சொன்னபோதே முடியாது என்று தஷ்வந்த் அடம் பிடித்துள்ளார். பின்னர், 7வயது ஹாசினியை கொலை செய்தபோது தன் மகன் என்பதால், ஆதரவு தெரிவித்தனர் பெற்றோர். சொத்துக்களைவிற்று தஷ்வந்தை ஜாமினில் வெளிக்கொண்டுவந்தனர்.

வீட்டுக்கு வந்த தஷ்வந்த்திடம் ஹாசினியை ஏண்டா கொலை செய்தாய்?அந்த பாவம் உண்ணை சும்மா விடாது என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்துள்ளனர். இதனால், பெற்றோரிடம் இருந்து தப்ப வேண்டும் என்று திட்டமிட்டார் தஷ்வந்த்.





According to confession statement Dhasvanth was planning to kil1 his father and friend says Police.

description:
Description: https://www.youtube.com/c/NCMEpicMusic

https://twitter.com/freemusiceg16
https://www.facebook.com/NCMmusic16/
soundcloud.com/ncm-free-music

Recommended