Skip to playerSkip to main contentSkip to footer
  • 5/19/2018
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி உறுதி என்ற நிலையில், தனது முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார்.
கர்நாடகாவிற்கு நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 15ம் தேதி வெளியாகின. இதில் பாஜக 104 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 78. மஜத 38 தொகுதிகளில் வென்றன. இதர பிரிவில், 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜகவை ஆட்சியமைக்க அழைத்தார் ஆளுநர் வஜுபாய் வாலா. இதையடுத்து கடந்த 17ம் தேதி எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசம் தந்தார் ஆளுநர். ஆனால் காங்கிரஸ் வழக்கு தொடரவே, அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.

BS Yeddyurappa decides to resign his MLA post if he loses in floor test. Yeddyurappa resigns.

Category

🗞
News

Recommended