அன்புச்செழியன் மிரட்டவில்லை, ரொம்ப நைஸ்- வீடியோ

  • 7 years ago
பைனான்ஸியர் அன்புச்செழியன் ரொம்ப நல்லவர், ஸ்வீட்டானவர், மரியாதையானவர் என்று நடிகை தேவயானி தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் அசோக் குமாரின் தற்கொலைக்கு காரணமான பைனான்ஸியர் அன்புச்செழியன் ஒரு காலத்தில் நடிகை தேவயானியை பணத்திற்காக மிரட்டியதாக பேசப்பட்டது. இந்நிலையில் அன்புச்செழியன் பற்றி தேவயானி பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் தேவயானி கூறியிருப்பதாவது,

கொடுக்க வேண்டிய பணத்தை சரியான நேரத்தில் அன்புவிடம் கொடுத்துவிட்டோம். என்னை பொறுத்த வரைக்கும் எப்ப அவரை சந்தித்தாலும் ரொம்ப நல்லவர், ரொம்ப மரியாதையுடன் ஸ்வீட்டாக பேசுவார் பழகுவார்.

நான் அவரை இரண்டு முறை தான் சந்தித்துள்ளேன். நம்ம படம் முடிச்ச பிறகு மற்றும் தயாரிப்பாளர் சங்க தேர்தல் டைம். நாங்கள் எல்லோரும் தயாரிப்பாளர்களாக அவரிடம் வாக்கு கேட்க சென்றபோது பார்த்திருக்கிறேன்.

Actress Devayani said in a video that financier Anbu Chezhiyan didn't threaten her and he is a very nice, sweet person. Earlier it was rumoured that Anbu threatened Devayani for money.