மாதவன் முன் ஜாமீனுக்கு முயற்சி- வீடியோ

  • 6 years ago
போலி வருமான வரித்துறை அதிகாரி தொடர்பான வழக்கில் தலைமறைவாகியுள்ள தீபாவின் கணவர் மாதவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த வாரம் தீபாவின் சொத்து ஆவணங்களை பறிப்பதற்காக அவரது கணவர் மாதவனின் ஏற்பாட்டில் தான் தீபா வீட்டிற்கு சென்று போலீ வருமான வரித்துறை அதிகாரியாக நடித்தாக கைது செய்யப்பட்ட பிரபாகரன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பிரபாகரனுக்கு ஐடி கார்டு தயாரித்து கொடுத்த அச்சக உரிமையாளரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மாதவனிடம் விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளனர். போலீசாரின் விசாரணைக்கு பயந்து கடந்த இரு தினங்களாக மாதவன் தலைமறைவாகியுள்ளார், இந்நிலையில் மாதவனை கைது செய்ய போலீசார் முடிவெடுத்துள்ளதுடன் அவர் மீது வழக்கும் பதிவு செய்து தேடி வருகின்றனர். ஒரிரு தினங்களில் மாதவனை கைது செய்து விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர். போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகியுள்ள மாதவன் தனது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி விண்ணப்பிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Des : Deepa's husband, Madhavan, has been booked in the case of fake income tax officials and the police are searching for the case seriously.