ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஆறுமுகசாமி கமிஷனில் ஆஜர்- வீடியோ

  • 7 years ago
தமிழக அரசின் செயல்பாடுகள், ஜெயலலிதா ரகசியங்கள் என்று அனைத்து கேள்விகளுக்கும் பதில் தெரிந்தவர் என்று கருதப்படுபவர் ஷீலா பாலகிருஷ்ணன் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் மீண்டும் ஆஜராகியுள்ளார். ஜெயலலிதாவின் இறுதி காலகட்டத்தில் அவரின் அரசியல் வாழ்க்கை மற்றும் சொந்த வாழ்க்கையிலிருந்து ஒரு பெயரை நீக்க முடியாது என்றால் அது ஷீலா பாலகிருஷ்ணனின் பெயர் தான். அவர் சிறைக்கு சென்ற நாட்களாக இருக்கட்டும், உலகை விட்டு சென்ற நாட்களாக இருக்கட்டும் தமிழகத்தை முன்புலத்திலும் பின்புலத்திலும் இருந்து ஆட்சி செய்தவர் தான் ஷீலா பாலகிருஷ்ணன்.

ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டிருந்த ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று மீண்டும் ஆஜரானார் ஷீலா பாலகிருஷ்ணன். பல மர்மங்களுக்கு இவரிடம் விடை இருப்பதால் ஆணையம் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சரி யார் இந்த ஷீலா பாலகிருஷ்ணன் என்று பார்ப்போம்.

முதல்வர் ஜெயலலிதாவின் செயலாளராக 2002-ம் ஆண்டு பணியமர்த்தப்பட்டார். பெண் அதிகாரிகளை எப்போது ஊக்கவிக்கும் ஜெயலலிதா இவரையும் ஊக்கவித்தார், இதனைத்தொடர்ந்து மீண்டும் 2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதும் தமிழகத்திம் தலைமைச் செயலாளரானார் ஷீலா பாலகிருஷ்ணன்

Ex Chief Secretary Sheela Balakrishnan again Appeared before the Arumugasamy Commission

Recommended