மலேசியாவில் நெருக்கடிக்குள்ளாகும் இலங்கைத் தமிழ் அகதிகள்

  • 13 years ago
மலேசியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுவருவதாக அறியமுடிகின்றது.

சட்டபூர்வமாக மலேசியாவில் தங்குவதற்கு அனுமதியற்ற நிலையில், வேலைவாய்ப்பு -கல்வி - மருத்துவம் ஆகிய அடிப்படை விடயங்களை பெற்றுக் கொள்ளமுடியாத நிலையில் உள்ளனர்.

இதேவேளை, சட்டபூர்வ வதிவிட அனுமதி பத்திரம் அற்ற நிலையில் உள்ளுர் கண்காணிப்பு காவலாளிகளால், அகதிகள் கைது செய்யப்பட்டு, இரகசியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் அச்ச நிலையும் தோன்றியுள்ளது.

இதுகுறித்து, ஏற்கனவே யுஎன்சீஆர் ஐநா நிறுவனம் உட்பட பல உள்ளுர் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், சமீபத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அகதிகளைச் சந்தித்துள்ளனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகளுக்கான அமைச்சகத்தின் பங்களிப்புடன் உருவாக்கம் பெற்ற Sri Lankan Tamil Refugees Organization Malaysia எனும் அமைப்பின் செயற்திட்டங்களை பார்வையிட்டதோடு அகதிகளோடு கலந்துரையாடல்களையும் நடாத்தியுள்ளனர்.

Recommended