தானே உருவாக்கிய SMART CLASS..! 8ம் வகுப்பு மாணவின் அசத்தல் முயற்சி! #onlineclass

  • 4 years ago
கொரோனா கல்வியை முடக்கிபோடலாம் ஆனால் கல்வி கற்கும் ஆர்வத்தை ஒருபோதும் முடக்கிப்போட முடியாது என நிரூபித்து வருகிறார் தொலைதூர மலையோரக் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பல்வேறு துறைகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி வேடிக்கை பார்த்து வருகிறது. கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் கல்வித்துறையும் கலங்கி நிற்கிறது. பள்ளிகளை பூட்டி, வகுப்பறைகளை மூடி, கொரோனா ஆடிய ஆட்டத்திற்கு அசராமல் தானே ஒரு வகுப்பறையை ஏற்படுத்தி தாமும் பயின்று பிற மாணவர்களுக்கும் கல்வி கற்றுத் தருகிறார் மலைக்கிராமத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவி அனாமிகா.