இரண்டு பெண்களின் தலையை வெட்டி நடுத்தெருவில் வைத்த சம்பவம்

  • 4 years ago
காதல் திருமணம் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நடந்த கொலைக்குப் பழிவாங்கும் வகையில் தாய், மகள் கழுத்தறுத்துக் கொடூரக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கொலையாளிகள் நாட்டு வெடிகுண்டு வீசி இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகேயுள்ள மருகால்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அருணாசலம் என்பவரின் மகன் நம்பிராஜன், அதே ஊரைச் சேர்ந்த தங்கபாண்டி என்பவரின் மகள் வான்மதியை காதலித்துவந்திருக்கிறார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும், இந்தக் காதலுக்கு வான்மதியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.