நிஜ பாம்பை முகக்கவசமாக பயன்படுத்திய இங்கிலாந்து நபர்!#viral

  • 4 years ago
இங்கிலாந்தில் நிஜ பாம்பை முகக்கவசமாக பயன்படுத்தி பேருந்தில் பயணம் செய்த நபர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சில நாடுகளில் இந்த விதிமுறையை மீறுவோருக்கு அதிக அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அச்சத்தில் முகக்கவசம் அணிந்தே வெளியே வருகின்றனர். விதவிதமான முகக்கவசங்கள் தற்போது ட்ரெண்ட் ஆக ஆரம்பித்துள்ளன. ஆனால் இங்கிலாந்தில் விநோதமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. மான்செஸ்டரில் பேருந்தில் பயணம் செய்த நபர் ஒருவர் பாம்பை முகக்கவசமாக பயன்படுத்தியுள்ளார். #viral #omg #coronavirus