தடியடியில் சிக்கிய பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டதற்கு அரசாங்கம் என்ன பதில் சொல்லப்போகிறது?
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுக்கும் விஷயமும், ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்களும், அதனைத் தொடர்ந்த நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட போராட்டங்களும் உலகறிந்த ஒன்று. காவிரி டெல்டாவில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்டவை எடுக்கப்படுவதன் மூலம் டெல்டாவின் மொத்த விவசாயமும் முடங்கிப் போவதோடு அல்லாமல், நிலத்தடி நீரின்றி, மக்களின் வாழ்வும், வாழ்வாதாரமும் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் எனப் பல சூழலியலாளர்களும், இயற்கை ஆர்வலர்களும் ஆதாரங்களோடு குற்றம்சாட்டி வருகின்றனர்.
ongc doesnt have license for oil wells
ongc doesnt have license for oil wells