ஓ.பி.எஸ் உத்தமரா ? பாகம் - 5

  • 4 years ago
அந்தநேரத்தில் பன்னீர்செல்வம் தனது விசுவாசத்தை ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும், தன் அரசியல் குரு தினகரனுக்கும் நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அன்றாடம் தோட்டத்துக்கு அட்டெண்டன்ஸ், நீட்டிய பைல்களில் கையெழுத்து, இருபத்து நாலு மணி நேர கண்காணிப்பு என்று தங்கக்கூண்டில் அடைக்கப்பட்ட பச்சைக் கிளியைப்போல் பரிதவித்தார் பன்னீர்செல்வம். அது அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. அதேநேரத்தில் எதிர்காலத்தில் எப்படிச் செயல்படவேண்டும் என்பதற்கான பாடங்களாகவும் அமைந்தன. யாருக்கு தன் விசுவாசத்தைக்காட்ட வேண்டும் என்று ஜெயலலிதாவே பன்னீருக்கு வகுப்பெடுத்தார். அதில் பன்னீருக்கு ஜெயலலிதா மூன்று கட்டளைகள் கொடுத்தார். அந்தக் கட்டளைகளில் ஒன்றுதான், தினகரனுக்கும் பன்னீருக்கும் இடையில் லேசான விரிசல் உருவாகக் காரணமாக அமைந்தது.

Category

🗞
News

Recommended