இனி விவசாயப் போராட்டம் கூடாது ! உஷாரான உளவுத்துறை

  • 4 years ago
பூட்டுப்போட்டு போராட்டம்!

கண்ணீர்க்கதையாகப்போன இந்தப் போராட்டத்தின் உச்சமாகக் கடந்த 10-ம் தேதி திடீரென நிர்வாணப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி அலுவலகம் எதிரே நடந்த இந்த நிர்வாணப் போராட்டம் அனைவர் மனதிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. "நிர்வாணம் ஆனது விவசாயிகள் அல்ல... மத்திய அரசின் செயல்பாடு" என்று பலரும் கருத்து தெரிவித்தனர். உணர்வுபூர்வமாகப் போய்க்கொண்டிருக்கும் போராட்டத்துக்கு மத்திய அரசு செவிசாய்க்காத நிலையில், திடீரென இன்று (13-4-17) காலை 9.20 மணிக்கு சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்துக்கு வந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அந்தப் பாலத்துக்குப் பூட்டுப்போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞர் அமைப்புடன் கைகோத்த இயக்குநர் கெளதமன், இந்தப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கினார். மேம்பாலத்துக்குப் பூட்டுப்போட்டதால் போக்குவரத்து முற்றிலும் அந்தப் பகுதியில் முடங்கியது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் போராட்டக்காரர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிக்கொண்டிருந்த நிலையில் அவர்களைப் போலீஸார் கைதுசெய்தனர்.

Category

🗞
News

Recommended