சென்னையில் கஞ்சா செடி வளர்த்த இளைஞர்கள் கைது- வீடியோ

  • 6 years ago
ஃ பேஸ்புக்கில் கஞ்சா செடியுடன் செல்ஃபி போட்ட வாலிபர்களை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். ஃபேஸ்புக்கில் கஞ்சா உடன் போட்ட புகைப்படம் வைரலானது. இது குறித்து சென்னை சைபர் க்ரைம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, சைபர் க்ரைம் போலீசார் சம்பந்தப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்த நபர் குறித்து விசாரணை நடத்தினர்.

ராயப்பேட்டை வி.எம்.தெருவை சேர்ந்த சசிகுமார்,22 என்பவரே புகைப்படத்தை பதிவிட்டவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், திருவல்லிக்கேணி நீலம் பாஷா தெருவை சேர்ந்த நண்பர் கமல் வீட்டின் மொட்டை மாடியில் பூந்தொட்டியில் விதைத்து கஞ்சா செடியை வளர்த்து வந்ததாக கூறினார்.

The city police arrested a man after a selfie that went viral on Facebook showed him growing cannabis plants yield ganja or marijuana on his terrace garden in Royapettah.