ME TOO மர்மம் என்ன ?.. பி.டி. செல்வகுமார் கேள்வி-வீடியோ

  • 6 years ago
வைரமுத்து, நடிகர் அர்ஜுன் மீது பிரச்சனை நடக்கும் போது புகார் கொடுக்காமல் பத்து ஆண்டுகள் கடந்து பாலியல் புகார் கொடுப்பதில் மர்மம் உள்ளது என இயக்குனர் பி.டி. செல்வகுமார் தெரிவித்துள்ளார்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆதரவற்ற பெண்களுக்கு இலவச ஆடுகளை தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கிய தமிழ் திரைபடத்துறை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டம் ஓக்கி புயலில் பெரும் பாதிப்பை அடைந்த போது, மத்திய மாநில அரசுகள் அந்த பாதிப்புகளை கண்டுகொள்ளவில்லை பாதிக்கபட்டமக்களுக்கு ஏதுவும் செய்யவில்லை என்றும் நாட்டில் வறுமை, வேலையின்மை, பொருளாதாரம் இன்மை என பல பிரச்சனைகள் இருந்து வருகிறது. சிக்களுக்கு மேல் சிக்கல் உள்ளது. இதற்கெலாம் தீர்வு காணமுடியாமல் இருந்து வரும் நிலையில், மீ.டூ. புகார்கள் தலை தூக்கி உள்ளது. வைரமுத்து, நடிகர் அர்ஜுன் ஆகியோர் மீது ஒரு பெண் பல ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக புகார்கள் கூறி வருகிறார்கள். அதுவும் பிரச்சனை நடக்கும் போது புகார் கொடுக்காமல் பத்து ஆண்டுகள் கடந்து புகார் கொடுப்பதேன் மார்மம் என்ன? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Des: Director PT has said that there is a mystery in sexually abusing ten years of violating the actor's complaint against actor Arjun. Says Selvakumar