Skip to playerSkip to main contentSkip to footer
  • 5/11/2018
குழந்தைகளை திருட வந்ததாக வடமாநில இளைஞரை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அம்மூர் பகுதியில் சஞ்சய் என்ற வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். ஊருக்கு புதிதாக அந்த இளைஞர் தென்பட்டதால் அப்பகுதியினர் சஞ்சய்யை சுற்றி வளைத்து பிடித்ததுடன் குழந்தைகளை திருட வந்ததாக கூறி மின் கம்பத்தில் கட்டி வைத்து உதைத்துள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரியவர சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பொதுமக்களிடம் இருந்து சஞ்சயை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்,.

The incident has stirred up the North-East youth who were hiding in the public electricity supply to steal children.

Category

🗞
News

Recommended