சசிகலாவினால் பலிகொடுக்கப்பட்ட ஓபிஎஸ்- வீடியோ

  • 6 years ago
சசிகலா முதல்வராக வேண்டும் என்பதற்காக தனது முதல்வர் பதவியை ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா செய்த நாள் இன்றுதான். இதே நாளில் அவரது ராஜினாமாவை அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஏற்றுக் கொண்டார். சசிகலா இந்ச மாநிலத்தின் முதல்வராக போகிறாரா என்று தமிழக மக்கள் அதிர்ச்சியுடன் இருந்தனர். ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்துவிட்டார்.

இதையடுத்து கட்சியினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஜெயலலிதாவால் இரு முறை முதல்வராக நியமிக்கப்பட்டவரும் ஜெ.வின் நம்பிக்கைக்குரியவருமான ஓ.பன்னீர் செல்வம் டிசம்பர் 6-ஆம் தேதி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

O.Panneer Selvam resigns his CM post on this day last year. Governor also accepts his resignation and asks him to continue as CM till further measures to be taken.

Recommended