இன்னவோ காரை ஒப்படைக்க நாஞ்சில் சம்பத்திற்க்கு அதிமுக கெடு

  • 6 years ago
இன்னோவா காரை நாளைக்குள் ஒப்படைக்குமாறு தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத்திற்கு அதிமுக கெடு விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சி அலுவலகத்தில் நாளை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் காரை திரும்ப ஒப்படைக்க நாஞ்சில் சம்பத் வருவார் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நாஞ்சல் சம்பத்தை கட்சியின் பேச்சாளராக நியமித்ததோடு அவருக்கு இன்னோவா காரையும் கட்சியின் சார்பில் பரிசாக அளித்தார் ஜெயலலிதா.

இதனால் நாஞ்சில் சம்பத்திற்கு இன்னோவா சம்பத் என்று சமூக வலைதளங்கள் அடைமொழி தந்தன. 2016 சட்டமன்ற தேர்தலின் போது இந்த இன்னோவா காரில் தான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் நாஞ்சில் சம்பத். இந்நிலையில் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இன்னோவா காரையும் கட்சி அலுவலகத்தில் விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனையடுத்து சசிகலா சமாதானம் பேசியதையடுத்து, மீண்டும் இன்னோவா காரை பெற்றுக் கொண்டார் நாஞ்சில் சம்பத். அதோடு சசிகலா, தினகரனின் தீவிர ஆதரவாளராக அப்போது முதல் நாஞ்சில் சம்பத் செயல்பட்டு வருகிறார்.

ADMK sets deadline for Nanjil sampath to surrender Innova car which was given by ADMK then General secretary Jayalalitha and also fix deadline to vacate the government alloted house at Beasant nagar.

Recommended