கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் சித்த மருந்துகளால் குணமடைந்து வீடு திரும்பிய செய்திகளைக் கேள்விப்படுகிறோம். உலகமே கொரோனாவுக்கான தீர்வைக் கண்டறிய முடியாமல் திணறி வரும் சூழலில் சித்த மருத்துவ முறைகளுக்குக் கட்டுப்படுகிறதா கொரோனா வைரஸ் என்ற கேள்வியும் ஆச்சர்யமும் எழுகிறது.