காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்துவருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைப்பயணம் நடந்துவருகிறது. இந்தநிலையில், காவிரி உரிமை மீட்புக் குழு மற்றும் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை இணைந்து ஐ.பி.எல் கிரிக்கெட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டக் குழுவைச் சேர்ந்த சினிமா இயக்குநர் களஞ்சியம், கரூரைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் சங்கர் நகர் காவலர் ஜெயச்சந்திரன் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.