Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/31/2017
ரஜினியின் அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பு தமிழக மக்களிடையே எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் தெரிவித்து உள்ளார். தனிக்கட்சி தொடங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக ரஜினி இன்று அறிவித்து உள்ளார். ரஜினியின் இந்த அறிவிப்பல் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

மத்திய தணிக்கை குழு அறிக்கையிலேயே கூடங்குளம் அணு உலைகள் முதல் இரண்டு யூனிட்டுகள் தரமற்றவையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை தான் நாங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இதற்காக இந்த அரசு எங்களின் மீது பல்வேறு வழக்குகளை போட்டு உள்ளது. இங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னமும் பாதிக்கப்பட்டு உள்ளது.

Koodangulam Anti Nuclear Activist Suba Udakumaran about Rajini political Statement. He says that Rajini is Just pretending to be a another Politician from Poes Garden.

Category

🗞
News

Recommended