ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தது ஜிம்பாப்வே.. அதிபர் அதிரடி கைது..வீடியோ

  • 7 years ago
ஜிம்பாப்வே நாட்டிற்குள் அந்த நாட்டின் ராணுவம் புகுந்து நாடாளுமன்றத்தை கைப்பற்றி இருக்கிறது. மேலும் அந்த நாட்டின் அதிபர் ராபர்ட் மோகபி கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதன் காரணமாக அங்கு ராணுவ ஆட்சி தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற அதிகாரிகள் அனைவரும் அங்கு கைது செய்யப்பட்டு, அவர்களது அலுவலக அறையிலேயே வைக்கப்பட்டு இருக்கின்றனர். ராணுவத்தின் இந்த நடவடிக்கை இன்னும் சில காலத்திற்கு தொடரும் என்று கூறுகிறார்கள். மேலும் எப்போது வேண்டுமானாலும் அங்கு புரட்சி வெடிக்கலாம் என்றும் தெரிவிக்கப்டுகிறது.

1980 வருடம் இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து ஜிம்பாப்வேவில் ராபர்ட் மோகபி ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. 37 வருட இந்த ஆட்சியில் முதல் 20 வருடங்கள் மிகவும் நன்றாகவே சென்றது. நாடும் நிறைய வகைகளில் முன்னேறியது. ஆனால் 2000ல் இருந்து அந்த நாட்டின் பொருளாதாரம் தலைகீழானது. அரசின் முடிவுகள் அனைத்தும் மக்களுக்கு எதிராக இருந்தது. வறுமை ஆட்டிப்படைக்க தொடங்கியது.

இந்த நிலையில் நேற்று காலை அந்த நாட்டின் ராணுவம் திடீர் என்று நாட்டிற்குள் புகுந்தது. மேலும் நாடாளுமன்றத்திற்குள் சென்ற ராணுவம் அதன் உள்ளே செல்லும் மற்றும் வெளியே செல்லும் வழிகளை அடைத்தது. இதன் காரணமாக அந்த நாடாளுமன்றத்திற்குள் இருந்த அதிபர் ராபர்ட் மோகபி வெளியே செல்ல முடியாமல் அங்கேயே மாட்டிக் கொண்டார். அவருடன் மற்ற அதிகாரிகளும் உள்ளேயே இருக்கின்றனர்.

Power slips from Zimbabwe President to army. President Mugabe detained as military take over Harare . Army says 'as soon as we have accomplished our mission, we expect that the situation will return to normalcy'