பார்வை குறைபாடுடைய மாணவனுக்கு நவீன மடிக்கணினியை வழங்கிய முதல்வர்- வீடியோ

  • 6 years ago
பார்வை குறைபாடுடைய மாணவன் சபரி வெங்கட்டுக்கு அவர் பயன்படுத்தும் வகையிலான இலவச நவீன மடிக்கணினியை முதல்வர் பழனிச்சாமி வழங்கினார்.



கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ரகு என்பவரின் மகன் சபரி வெங்கட். பிறக்கும்போதே பார்வை குறைபாடோடு பிறந்த இவர் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே கட்டுரை போட்டி, பேச்சு பேட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு மாவட்ட, மாநில அளவில் பல பதக்கம் வென்றுள்ளார். இதற்காக இவர் ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பரிசும் பெற்றுள்ளார். அதேபோல் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமிடமும் சான்றிதழ் பெற்றுள்ளார். ஐ.ஏ.எஸ் ஆவது தான் இலக்கு என செயல்பட்டு வரும் இவருக்கு தனது பாராட்டை தெரிவித்து அவர் பயன்படுத்தும் வகையிலான இலவச நவீன மடிக்கணினியை தலைமை செயலகத்தில் முதல்வர் வழங்கினார்..

Des: The Chief Minister Palanisamy presented a free modern laptop in the way he used for the visionary student Sabari Venkat.