தினகரனின் செயல்பாடுகளால் கடும் அதிருப்தியில் இருக்கும் சசிகலா- வீடியோ

  • 6 years ago
நடராஜனின் இறுதிச்சடங்கு முடிந்த நிலையில் சசிகலா, தினகரன் உள்ளிட்ட யாரிடமும் முகம் கொடுத்து பேசாமல் அவ்வப்போது தனி அறையில் அமர்ந்து கொண்டு அழுதுகொண்டிருக்கிறார். தினகரனின் செயல்பாடுகளால் உச்சகட்ட கொதிப்பில் இருப்பதாலேயே தினகரனிடம் இதுவரையில் முகம் கொடுத்துப் பேசவில்லை என்கின்றனர் மன்னார்குடி கோஷ்டிகள்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து தரைவழி மார்க்கமாக தஞ்சாவூருக்கு வந்தார் சசிகலா. அவர் வந்த வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர் பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பனும் செந்தில் பாலாஜியும். தர்மபுரி வழியாகக் கார் சென்றதால், ஏராளமான வாகனங்களை அணிவகுக்க வைத்தனர். ஒவ்வொரு செக்போஸ்ட்டுக்கும் நூற்றுக்கணக்கான வாகனங்களைப் பின்தொடர வைத்தனர்.

Sasikala is upset over TTV.Dinakaran's political move till now not spoken with him, but sources saying within a couple of days she will settle down the family issues and will give strict instructions to Dinakaran it seems.