குடிபோதையில் இறந்த ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை?- வீடியோ

  • 6 years ago
மதுபோதையில் இறந்த ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு எதற்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் ஸ்ரீதேவி உயிர் இழந்தார். முதலில் மாரடைப்பு என்றார்கள் பின்னர் தான் அவர் குடிபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. ஸ்ரீதேவியின் உடல் ஒரு வழியாக நேற்று இரவு மும்பை கொண்டு வரப்பட்டது. குடிபோதையில் விழுந்து இறந்த ஸ்ரீதேவியின் உடல் மீது நம் தேசியக் கொடியை போர்த்தி மாநில அரசு மரியாதை செய்துள்ளது. இதை பார்த்து பலரும் கோபப்பட்டுள்ளனர். குடிபோதையில் விழுந்து இறந்தவரை கொண்டாடுவார்கள் ஆனால் ஒரு வேளை சோறு கிடைக்காமல் போன மதுவை அடித்துக் கொன்றதை யாரும் கண்டுகொள்ளக் கூட மாட்டார்களா என்று சமூக வலைதளங்களில் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Commoners are not happy after Maharashtra government has given state funeral for actress Sridevi who died of accidental drowning under the influence of alcohol.

Recommended