படுக்கை அறைக்கு என்னை அழைத்தார்: அமலா பால்

  • 6 years ago
ஜனவரி 31ம் தேதி டான்ஸ் ஸ்டுடியோவில் என்ன நடந்தது என்பது குறித்து நடிகை அமலா பால் அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகை அமலா பால் கொடுத்த பாலியல் புகார் வழக்கில் சென்னையை சேர்ந்த அழகேசன் மற்றும் அவரது நண்பர் பாஸ்கர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அமலா பால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஜனவரி 31-ம் தேதி சென்னையில் ஒரு டான்ஸ் ஸ்டூடியோவில் நான் நடன பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த ஒருவர் என்னை அணுகி, நடன நிகழ்ச்சியை பற்றி ஒரு சில முக்கிய விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்று கூறினார். மலேசியாவில் பிப்ரவரி 3-ம் தேதி நடக்கும் விழாவுக்கு பிறகு அவருடன் இரவு உணவில் கலந்துகொள்ள அழைத்தார். அப்படி என்ன விஷேசமான டின்னர் என நான் அவரை குறுக்கு கேள்வி கேட்டபோது, அவர் அலட்சியமாக உனக்கு தெரியாதா? என்ற பாணியில் பேசினார். நாங்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் எங்களை சுற்றி யாரும் இல்லாததால் நான் கலவரமானேன். விசாரணை நடந்து வருகிறது, அதற்கு தடையாக நான் இருக்கக் கூடாது என்பதாலேயே நான் அமைதி காத்து வருகிறேன். ஆனால் அந்த மாதிரி கீழ்த்தரமாக செய்தி வெளியிடும் மீடியாக்கள் மீது அவதூறு வழக்கு தொடரவும் தயங்க மாட்டேன். சென்னை போலீசின் விசாரணையில் எங்கள் குழு மீதோ, மேனேஜர் பிரதீப்குமார் மீதோ எந்த தவறும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

Actress Amala Paul has released a statement about what happened at the dance stuido on january 31st and what made her to approach police to nab the culprit.

Category

🗞
News

Recommended