ஆயிரம்கால்மண்டபத்திற்கு பாதிப்பில்லை... தீ விபத்து குறித்து ஆட்சியர் தகவல்

  • 6 years ago
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீ முழுவதும் கட்டுக்குள் வந்துள்ளதாக ஆட்சியர் வீரராகவராவ் கூறியுள்ளார். கோயிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தீ விபத்திற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடந்த தீ விபத்து குறித்து அனைத்துத் துறையினருடன் ஆட்சியர் வீரராகவராவ் இன்று ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு பின்னர் வீரராகவராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது : அருள்மிகு மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் இருக்கும் கடைகளில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து தகவல் வந்த உடனே அனைத்துத்துறை அலுவலர்களும் நேரடியாக விபத்து நடந்த பகுதிக்கு வந்தோம். உடனடியாக தீயணைப்புத் துறையின் 5 வாகனங்களும் தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Madurai district Collector Veeraraghava Rao says that the fire at Meenakshi amman temple come under control, no damages to Aayiram Kaal Mandapam and no casualities reported.

Category

🗞
News

Recommended