போலீஸின் துப்பாக்கியை வைத்தே காவல் ஆய்வாளரை சுட்டுக்கொன்ற கொள்ளையன் !- வீடியோ

  • 7 years ago
ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற போது தமிழக போலீசாரின் துப்பாக்கியை வைத்தே காவல் ஆய்வாளர் பெரியபாண்டியை சுட்டு கொன்றுவிட்டு கொள்ளை குற்றவாளி தப்பித்துள்ளது தெரிய வந்துள்ளது. சென்னை கொளத்தூர் புதிய லட்சுமி புரத்தில் முகேஷ் குமார் என்பவரின் நகைக்கடையில் கடந்த நவம்பர் 16ல் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. மாடிக் கடையை வாடகைக்கு எடுத்த கொள்ளையர்கள் முதல் தளத்தில் இருந்து துளையிட்டு 3.5 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து தப்பியுள்ளனர். இந்த நகைக் கடை கொள்ளை தொடர்பாக ஏற்கனவே சென்ராம் , கேலாராம், சங்கர்லால், தவ்ராம் கைது செய்யப்பட்டனர்.

சென்ராமின் மகன் நாதுராம், தினேஷ் சவுத்ரியை பிடிக்க ராஜஸ்தானுக்கு தனிப்படை போலீஸ் சென்றிருந்தது. அப்போது ஜெய்த்ரான் என்ற இடத்தில் நாதுராம் தன்னுடைய குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். அங்கு சென்று அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாதுராமை கைது செய்து வெளியே அழைத்து வந்த போது திடீரென குற்றவாளி ஆய்வாளர் பெரியபாண்டியின் துப்பாக்கியை எடுத்தே அவரையும், துணை ஆய்வாளரையும் சுட்டுள்ளார். இந்த சம்பத்தில் தான் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி உயிரிழந்துள்ளார்.