ரவுடி பல்பு குமாரை நிர்வாணப்படுத்தி கொன்ற சொறி விஜய் டீம்- வீடியோ

  • 7 years ago
திருவல்லிக்கேணியில் ரவுடி பல்புகுமாரை நிர்வாணமாக ஓட விட்டு கல்லால் அடித்து கொன்றுள்ளனர் ரவுடி சொறி விஜய் குரூப். இந்த கொலை தொடர்பாக சொறி விஜய் அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவல்லிக்கேணி - விக்டோரியா விடுதி அருகே ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பது குறித்து அண்ணா சதுக்கம் காவல்துறையினருக்கு கிடைத்தது. கால்வாய் தெருவில் தலை நசுங்கிய நிலையில் கிடந்த உடலை கைப்பற்றினர்.
விசாரணையில், கொல்லப்பட்டவர் ரவுடி பல்பு குமார் என்பதும், ஒரு கும்பல் அவரை ஓட ஓட விரட்டி கற்களை வீசி தாக்கியதும் தெரியவந்தது. கீழே விழுந்த பல்பு குமாரின் தலையை நசுக்கி, அந்த கும்பல் கொடூரமாகக் கொன்றதும் தெரியவந்தது. கொலை தொடர்பாக, பிரசாந்த் என்ற மற்றொரு ரவுடியை கைது செய்த போலீசார், அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.சொறி விஜய்யுடனான மோதல் காரணமாகவே, பல்பு குமார் திருவல்லிக்கேணியிலிருந்த வீட்டை பட்டினப்பாக்கத்துக்கு மாற்றியதாகவும், சொறி விஜய் தற்போது வேறொரு வழக்கில் சிறையில் இருப்பதால் நண்பர்களைச் சந்திக்க வந்தபோது கொலையுண்டதும் தெரியவந்துள்ளது.தென் சென்னையில் குறிப்பாக திருவல்லிக்கேணி பகுதியில் நண்பர்களாக சுற்றி வந்த ரவுடிகள் பல்பு குமார், சொறி விஜய். கடந்த ஆண்டு போதையில் இருந்த போது மைதானத்தில் இருந்த பாம்பு குட்டியை எடுத்து பல்பு குமார் மீது வீசினான் சொறி விஜய், இதில் பல்பு குமார் கீழே விழுந்தான்.

Category

🗞
News

Recommended