#மெர்சல்-'இதுக்கெல்லாம் போட்டீங்களா கேஸு..?'- நீதிபதிகள் சரமாரி கேள்வி-வீடியோ

  • 7 years ago
விஜய் நடித்துள்ள மெர்சல்' திரைப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரியும் அதற்கு வழங்கியுள்ள தணிக்கைச் சான்றிதழை திரும்பப் பெறக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சில நாள்களுக்கு முன்னர் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரான வழக்கறிஞர் அஷ்வத்தாமன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், இன்று இந்த வழக்கை விசாரித்தது. மாற்றுத்திறனாளிகள் தவறாக சித்தரிக்கப்படுவதை எதிர்த்து வழக்கு போட்டீர்களா? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளை எதிர்த்து வழக்குப் போடுங்கள் எனவும் காட்டமாகக் கூறியுள்ளனர் நீதிபதிகள்.

The petition was filed in Chennai High Court seeking a ban on Vijay's film 'Mersal' and demanding a revocation of the censor certificate. In this case, High Court judges have raised questions to the petitioners.