மகளை பலமுறை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தைக்கு சிறைத்தண்டனை

  • 11 years ago
மகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தை ஒருவருக்கு 100 வருட சிறைத்தண்டனையும் 90 ஆயிரம் ரூபா அபராதமும் கம்பஹா நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.

பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய கமராலலாகே சந்திரசிறி என்ற நபருக்கே மேற்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளதோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் அவ்வாறு இந்த அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஒன்பது ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தனது 10 வயது மகளின் நிர்வாண புகைப்படத்தை எடுத்து வைத்திருந்ததுடன் பல முறை பாலியல் துஷ்பிரயோகத்துக்கும் உட்படுத்தியுள்ளார்.

பாதுகாவலனாக இருக்க வேண்டிய தந்தை செய்துள்ள காரியங்களுக்கு சிங்கள அகராதியில் ஒரு சொல் கிடையாது’ என்று
குறித்த வழக்கை விசாரித்த கம்பஹா நீதிமன்ற நீதவான் பியசிலி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

Category

🗞
News

Recommended