எம்ஜிஆரை போல் அஞ்சாமை நிலையை எடுக்க வேண்டும் | ஜெயக்குமார் பேச்சு...| Oneinda Tamil

  • 2 years ago
எங்கள் வீட்டுப்பிள்ளை படத்தில் எம்ஜிஆரை ஒரு அடி அடித்ததற்கு. நம்பியாரை மாறிமாறி அடிப்பதுபோல் அஞ்சாமை என்ற நிலையை எடுக்க வேண்டுமென முன்னால் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மேடையில் மறைமுக பேச்சு.






திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அருகே நேமம் பகுதியில் பூவை மூர்த்தியாரின் 70 ஆம் ஆண்டு பிறந்தநாள்விழா சகோதரத்துவ பண்பாட்டு கூடல் விழா.கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர்.பூவை ஜெகன் மூர்த்தியார் தலைமையில் நடைபேற்றது இவ்விழாவில் அதிமுக முன்னால் அமைச்சர்கள்.ஜெயகுமார்.பி.வி.ரமணா.பெஞ்சமின்.அப்துல்ரஹீம்.பங்கேற்று சிறப்புரையாற்றினர் அதற்கு முன்னதாக மூர்த்தியார் என் தாய் தந்தை திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தனர் அப்போது பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்.
எங்கள் வீட்டுப்பிள்ளை படத்தில் நம்பியார் கையேழுத்து போடவில்லை என எம்ஜிஆரை கண்ணத்தில் ஓங்கி ஒரு அடி அடிப்பார்.அதன் பிறகு எம் ஜி ஆர் நம்பியார் கண்ணத்தில் மாறி மாறி அடிப்பார் அதுபோல அடக்கு முறைக்கும் சரி. ஜனநாயக விரோத செயல்களுக்கும் அஞ்சாமை என்கின்ற ஒரு நிலை எடுக்க வேண்டும் எனவும் எதற்கும் நாம் அஞ்சக் கூடாது அதுதான் நமது குறிக்கோளாக இருக்க வேண்டும் என மறைமுகமாக அதிமுக முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.அதைத் தொடர்ந்து பேசிய மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி அம்பேத்கரின் உறவினரான தெல் தொம்பி அவர்கள் இரண்டு வருடங்களாக சிறையில் உள்ளார் எனவும் இந்த ஆட்சியாளர்கள் அவரை அம்பேத்கரின் குடும்பத்தாரை சிறையில் வதைத்து வருகிறார்கள். அவரோடு இருக்கின்ற சிந்தனையாளர்கள் சிறையில் உள்ளார்கள் எனவும் அவர்களை மீட்கக் கூடிய சூழலை நாம் வலிமையாக எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பதாகவும் இது நூறு ஆண்டுகால போராட்டம் இந்தப் போராட்டத்தில் அனைவரும் கரம் கோர்த்து நிற்க வேண்டும் நாங்கள் எந்த கட்சிக்கும் விரோதிகள் அல்ல. மாநில கட்சிகள் இந்த மாநிலத்தை ஆளவேண்டும். மாநில கட்சியில் இந்த மக்களுக்கு துணை நிற்க வேண்டும் எனவும் விருப்பத்தை கொண்டவர்கள் நாங்கள் எனவும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயகுமார் அவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகொள் வைப்பதாக கூறி விக்ரமாதித்தனின் தோளில் இருக்கும் வேதாளம் என்பது வழிகாட்டுவதற்கான வேதாளம் அல்ல. அது விக்கிரமாதித்தனை சாப்பிடுவதற்காக இருக்கக்கூடிய வேதாளம். அந்த வேதாளத்தை கீழே இறக்கி விடுங்கள் என்ற வேண்டுகோளை இச்சமயத்தில் வைப்பதாக கூறியதை தொடர்ந்து அக்கூட்டத்தில் கரகோசம் சிரிப்போலியும் அதிர்ந்தது.

Recommended