"மோடியின் கடிதம் மோடிக்கே" மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்!

Tamil Samayam

by Tamil Samayam

1 view
கடந்த 2011ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக மோடி இருந்த போது குஜராத் கவர்னராக கமலா பெனிவால் இருந்தார். அப்பொழுது மாநில உரிமைகளில் கவர்னர் தலையிடுவதாக கூறி அவரை திரும்ப பெற வேண்டுமென மோடி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதி குஜராத் மாநிலத்தில் மாபெரும் கண்டன ஊர்வலத்தை மேற்கொண்டார். இந்நிலையில் அந்தக் கடிதத்தை நினைவு படுத்தி அதனை மோடிக்கே அனுப்பும் போராட்டத்தை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் மேற்கொண்டுள்ளனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தபால் நிலையத்தில் பிரதமர் அன்று எழுதிய கடிதத்தின் நகல்களை அவருக்கே தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.