ஸ்ரீலங்காவுக்கு சிகிக்சை; அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடையும் மக்கள்!

  • 2 years ago
இலங்கையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான பொருளாதார சிக்கல் ஏற்பட்டு மக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதோடு அங்கு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் கிடுகிடுவென உயர்ந்ததை அடுத்து பொதுமக்கள் மிகு‌ந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடியை தாக்கு பிடிக்க முடியாமல் பெரும்பாலான இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்துக்கு படையெடுத்து வரும் சூழல் உருவாகி வருகின்றது,