தமிழர்கள் சாவு - ஆந்திர போலீஸின் நிஜமுகம்!

  • 4 years ago
கடந்த நான்காண்டு காலமாகவே செம்மரக்கட்டை தொடர்பான வழக்கில் ஆட்களை கைது செய்ய அதே 82 தமிழ்ப்பெயர்களைத்தான் ஆந்திர போலீசார் பயன்படுத்துவதாக அம்மாநில சமூகநல அமைப்புகளே குற்றஞ்சாட்டி வந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தமிழகத்தை சேர்ந்த 287 பேர் உட்பட விசாரணை கைதிகளாக சிறையில் இருக்கும் 349 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று திருப்பதி சிறப்பு நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது.