ஹைட்ரோகார்பனை வானத்திலா எடுக்க முடியும் ? | Hydrocarbon Project

  • 4 years ago
***’பா.ஜ.கவுக்கு பதிலடி கொடுப்போம்!’ - நெடுவாசல் போராட்டக் குழு***
நெடுவாசல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீட்புக் குழுவைச் சேர்ந்த செந்தில்தாசிடம் போராட்டம் குறித்துப் பேசினோம். "இயற்கை எரிவாயுத் திட்டத்தால் விவசாயிகளுக்கும், மண்ணுக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற கொள்கையோடு போராடி வருகிறோம். அதேபோன்று பா.ஜ.கவுக்கு என்று ஒரு கொள்கை உள்ளது. அவர்களும் அந்தக் கட்சியின் கொள்கையைப் பின்பற்றுகிறார்கள். பா.ஜ.க தலைவர்களின் கூற்றுப்படி,கொள்கையைப் பின்பற்றுகிறவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் என்றால் எங்களைப் போன்று, அவர்களும் பயங்கரவாதிகளே, இதனை அவர்களிடம் பதிவு செய்யுங்கள். போராட்டக்காரர்களின் பின்னணி குறித்து ஆராய்வதைக் காட்டிலும், விவசாயிகளின் பிரச்னைகள் பற்றி ஆராய்வது அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகுக்கும்.இதுபோன்று ஒவ்வொரு போராட்டத்துக்கும் உள்நோக்கத்துடன் கருத்துகளை சொல்பவர்கள், அவர்களுடைய பொறுப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள அவர்கள் கையாளும் நடைமுறை என்றே கருதுகிறேன். ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்தபோதும் இதே கருத்தை பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்தனர். அவர்கள் எங்களைப் பற்றி தெரிவிக்கும் கருத்துகளைக் கண்டு நாங்கள் அஞ்சப்போவதில்லை. இந்தத் திட்டத்தை கைவிடும்வரை எங்கள் போராட்டம் தொடரும். அதேநேரத்தில் அரசியல் கட்சிகளையோ, அரசையோ எதிர்க்க வேண்டும் என்பது எங்களது நோக்கம் அல்ல. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிற மத்திய அரசின் இந்த திட்டத்தை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம்" என்றார் அவர்.