1 லட்சம் பேர்...போலீஸ் சிக்னல்! அழகிரியின் அடுத்த மூவ்! #StalinVsAlagiri

  • 4 years ago
சென்னை அண்ணா சிலையில் இருந்து கருணாநிதி சமாதி வரையில், நாளை அமைதிப் பேரணியை நடத்த இருக்கிறார் மு.க.அழகிரி. இந்தப் பேரணியில் ஒரு லட்சம் பேர் வரையில் பங்கேற்க இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இதற்காக போலீஸ் அனுமதியையும் வாங்கிவிட்டனர். இந்த நிலையில், அழகிரியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த வேளச்சேரி பகுதிக் கழக தி.மு.க நிர்வாகி ரவியைக் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியிருக்கிறார் பொதுச் செயலாளர் அன்பழகன். இது அழகிரி தரப்பினரைக் கொந்தளிக்க வைத்துள்ளது.

#DMK #MKAlagiri #MKStalin #Kanimozhi #TNPolitics