கத்திரிக்காய் லாபகரமான பயிர். ஆனால், இதைச் சாகுபடி செய்வது விவசாயிகளுக்குப் பெரும் சவாலாகவே உள்ளது. ரசாயன முறையில் வீரிய ரகக் கத்திரிச் சாகுபடி செய்யும் விவசாயிகள் பூச்சி நோய்த் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுக்கா, மைக்கேல்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஜான் இமானுவேல், இயற்கை முறையில் ஒரு ஏக்கரில் செவந்தம்பட்டி நாட்டுக் கத்திரிச் சாகுபடி செய்து வெற்றிகரமாக மகசூல் எடுத்து வருகிறார்.