திருவேங்கடம்ஸ்ரீகலைவாணி மேல்நிலைப்பள்ளியின் 31வது ஆண்டு விழா...

  • 5 years ago
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடதில் உள்ள ஸ்ரீகலைவாணி மேல்நிலைப்பள்ளியின் 31வது ஆண்டு விழா நடைபெற்றது. சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்து அதிகாரி பத்மப்ரியா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவை பள்ளி தாலாளரின் துணவியார் தனலக்ஷ்மி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினார்களாக திருவேங்கடம் துணை தாசில்தார் திருமலைமுருகன், சங்கரன்கோவில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்சியில், அதிக மதிப்பெண், விளையாட்டு, நூறு சதவீத வருகை தந்த மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் பரதநாட்டியம், சிலம்பம்,மயிலாட்டாட்டம்,சிலம்பாட்டம் ,கீட்டார், கீபோர்டு உள்ளிட்ட பல்வேறு சாதனைகளும் நாட்டுப்புறத்தை மட்டுமே சார்ந்த கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில் பள்ளி ஆசிரியர்களும் பள்ளி மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்
31st anniversary celebration of Thiruvangadam Srikaligai