வட்டிக்கு பணம்வாங்கிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை..2 குழந்தைகளுடன் தீகுளிக்க முயற்சி.. வீடியோ

  • 6 years ago


சேலம் வீராணம் அடுத்துள்ள கத்தாளபாடி கிராமத்தைச் சேர்ந்த பெண் வெண்ணிலா. இவர் கணவனை பிரிந்து, மகன் பிரபு மற்றும் மகள் சரஸ்வதி ஆகியோருடன் வசித்து வருகிறார். வெண்ணிலா கூலி வேலைக்கு சென்று குழந்தைகளை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ரத்தினம் என்பவரிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். பணத்தை திரும்ப செலுத்தியும் வட்டி கூடுதலாக வேண்டும் என்று கூறி வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுவது மட்டுமில்லாமல் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் வீராணம் காவல் நிலையத்தில் இரண்டு முறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்றும், புகார் குறித்து காவலர்களிடம் கேட்டால் கேலி கிண்டல் செய்வதாகவும் வெண்ணிலா குற்றம்சாட்டினார்.



இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் வெண்ணிலா தனது 2 குழந்தைகளுடன் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சாலையின் நடுவே மூவரும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் சாலையில் திரண்டதால் பதட்டம் ஏற்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு இருந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம் குறித்து துறையினர் விசாரணை நடத்தி வருகிறது.



Des: Sexual harassment for a woman who paid interest.