தூத்துக்குடியில் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிய பெண் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி

  • 6 years ago
தூத்துக்குடி கந்தன்காலணியை சேர்ந்த லூயிஸ் சோபியா என்பவர் கனடாவில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் சென்னை வந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சென்றார். அந்த விமானத்தில் தமிழக பாஜக தலைவரும் பயணம் செய்தார். பின்னர் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து இறங்கி சென்ற போது திடீரென லூயிஸ் சோபியா, மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டார். இதனையடுத்து தமிழிசைக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.