கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் பேக்கரி கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீட்சா, பர்கர் போன்ற அந்நிய உணவிற்கு 5 சதவிகித ஜி.எஸ்.டி. வரி என்ற நிலையில், சாமானியர்கள் அதிகம் பயன்படுத்தும் உள்நாட்டு உணவு பொருட்கள் விற்பனையில் உள்ள பேக்கரிக்கு, 18 சதவிகித ஜி.எஸ்.டி. வரி விதிப்பு என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், ஜி.எஸ்.டி.யில் மாற்றம் கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், அந்நிய முதலீட்டை அனுமதிக்கமாட்டோம் என்று கூறிய அவர், வால்மார்டை அனுமதிக்க ஆய்வு நடத்தியதை கண்டித்து வரும் 24ம் தேதி டெல்லியில் தமிழக வணிகர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்