சேலம் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக திருமணி முத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் நாமக்கல்லில் உள்ள முக்கிய தரைப்பாலங்களின் மேல் 3 அடி உயரத்திற்கு சாயக் கழிவு நீர் கரைபுரண்டு செல்கிறது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சாலைகள் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும அவதி அடைந்துள்ளனர். வெள்ள நீரினால் மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இந்த வெள்ள நீர் துர்நாற்றத்துடன் பாய்வதால் கிராம மக்கள் சுவாச கோளாறு பிரச்சனையில் சிக்கி தவித்து வருகின்றன. பல ஆண்டுகளாக உயர்மட்ட பாலம் கேட்டு மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். கடந்த ஆண்டு இதே போல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு உயர் மட்ட பாலம் அமைத்து தருவதாக உறுதியளித்திருந்து குறிப்பிடதக்கது