ஆளுநரே டிஜிட்டல் பேனரை தடுப்பது புதுச்சேரி அரசை அவமதிக்கும் செயல் - திருமாவளவன்

  • 6 years ago
புதுச்சேரியில் டிஜிட்டல் பேனர் வைப்பதற்கு தடை விதித்திருப்பது ஜனநாயக விதிமுறைகளுக்கு மீறிய செயல் என்றும், ஆளுநரே டிஜிட்டல் பேனரை தடுப்பது புதுச்சேரி அரசை அவமதிக்கும் செயல் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அமைப்பாய் திரள்வோம் என்ற கருத்தரங்கு கூட்டம், லால் பகதூர் சாஸ்திரி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர். புதுச்சேரியில் டிஜிட்டல் பேனர் வைப்பதற்கு தடை விதித்து இருப்பது ஜனநாயக விதிமுறைகளுக்கு மீறிய செயல் என்றும் ஆளுநரே டிஜிட்டல் பேனரை தடுப்பது புதுச்சேரி அரசை அவமதிக்கும் செயல் எனவும் குற்றம் சாட்டினார், மேலும் இது அதிகார வரம்பு மீறல் என்றும் இதை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Category

🗞
News

Recommended