நவமலை வனப்பகுதியில் பழமையான சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டிக் கடத்திய சம்பவம்

  • 6 years ago
பொள்ளாச்சியை அடுத்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள நவமலை மற்றும் காடாம்பாறை வனபகுதிகள் மிகவும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது, இந்த வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள், தாவரங்கள் மற்றும் மரங்களை வனத்துறையினர் பாதுகாத்து கண்கானித்து வரும் நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நவமலை வகுதியில் இருந்த சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 10 ஆண்டுகள் பழமை வாய்ந்த சந்தன மரம் பல லட்சம் மதிப்புள்ளது எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பாதுகாக்கபட்ட நவமலை பகுதியில் அத்துமீறி நுழைந்து சந்தனம் மரம் வெட்டி சென்றது யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV