விஷம் தடவிய கேக் சாப்பிட்ட 8 வயது சிறுவன் பரிதாப மரணம்..வீடியோ

  • 6 years ago

எலியை பிடிக்க எலிமருந்து விஷம் தடவி வைக்கப்பட்ட கேக்கை எடுத்து சாப்பிட்ட 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கயத்தாறு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கயத்தாறு அருகே உள்ள கிராமம் தலையால் நடந்தான்குளம்.

இந்த கிராமத்தை சேர்ந்தவர் பெயர் தெய்வம். இவர் வீட்டில் பல நாட்களாக எலி தொல்லை இருந்து வந்துள்ளது. இதனால் எலிகளை ஒழிக்க, கடந்த 2 இரு தினங்களுக்கு முன்பு எலிமருந்து விஷம் தடவிய கேக்கை வாங்கி வந்தார்.