மும்பைக்கு கனமழை- கேரளா மீனவர்களுக்கு எச்சரிக்கை- வீடியோ

  • 6 years ago
மும்பை, தானே நகரங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளா, லட்சத்தீவு மீனவர்கள் அரபிக் கடல் மற்றும் கொங்கன் கோவா கடற்பரப்பில் ஜூன் 8 முதல் 12-ந் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, மத்திய அரபிக் கடல், கர்நாடக கடலோர பகுதிகள், கர்நாடகாவின் தெற்கு உள் மாவட்டங்கள், கோவா மற்றும் கர்நாடகாவின் வடக்கு உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும். மகாராஷ்டிரா கடலோர பகுதிகள், கோவா தென்மேற்கு பருவமழை மிக தீவிரமாக இருக்கும்.


An alert has been sounded in Mumbai and Thane as heavy downpour is expected in the next two days. Fishermen in Kerala and Lakshadweep have been advised to not venture into parts of the Arabian Sea off the Konkan and Goa coast between June 8 and 12.

Category

🗞
News

Recommended