கோவையில் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள்-வீடியோ

  • 6 years ago
கோவையில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அது தொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் இன்று காலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஆனந்தன் என்பவரை தடுத்து நிறுத்தி, அவரது பையை சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் கட்டுக்கட்டாக 2 ஆயிரம் கள்ள ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், ஆனந்தனையும், அவருடன் வந்த சுந்தர் என்பவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.