சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜிக்கு திடீர் நெஞ்சுவலி- வீடியோ

  • 6 years ago
மகளை கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்து வந்தார் பீட்டர் முகர்ஜி. இவரது மனைவி இந்திராணி முகர்ஜி(46). இந்திராணி முகர்ஜி தான் பெற்ற மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். மும்பையில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.