விபூதியால் கண் பார்வை பாதிப்பு- வீடியோ

  • 6 years ago
கோவில் திருவிழாவின் போது பூசாரி அடித்த விபூதி பக்தர்கள் கண்களில் பட்டதில் 200க்கும் மேற்பட்டோருக்கு கண் பாதிக்கபட்டதுடன் காய்ச்சல் ஏற்பட்டதால் பாதிக்கபட்டவர்கள் பீதி அடைந்தனர்



தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியில் கும்பாபிஷேகம் திருவிழாவில் சக்தி ஆடுதல் விழாவின் போது கத்தியில் அடித்துக் கொள்ளும் போது இரத்தம் வரும் அப்பொழுது விபூதி போட்டு இரத்தத்தை தடுப்பார்கள் அப்படி இரத்தம் வரும் போது விபூதி அடித்ததில் சுற்றி நின்று இருந்தவர்கள் கண்களில் விபூதி பட்டதில் தொடர்ந்து கண்ணெரிச்சல் ஏற்பட்டதில் 200க்கும் மேற்பட்டோர் கண் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர் மேலும் அவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது . மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவர்களூக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்துவருகின்றனர் .

Category

🗞
News

Recommended